Jan 22, 2014

விருமாண்டியும் ரங்கனும்

வறுமையின் நிறம் சிகப்பில் ரங்கனும் (கமல்ஹாசன்) தேவியும் (ஸ்ரீ..) பூங்காவில் நெருக்கமாக அமர்ந்திருக்கும்போது ஒருவர் எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருப்பார். கோபம் வந்த ரங்கன் அவரை போய் சப் சப்பென்று அடித்துவிடுவார். ஆனால் அவர் ஓவியம் வரையத்தான் தங்களை நோட்டம் விட்டார் என்று தெரிந்ததும் சாந்தம் (ஊமை என்பதை அறிந்து குற்றவுணர்ச்சியும்) அடைந்து  நண்பர்களாகி விடுவார்கள்.

கிட்டத்தட்ட அதே உருவ அமைப்பில் விருமாண்டியிலும் ஒரு ஆசிரியர் இவர்களின் நெருக்கமான தருணங்களை ஓவியமாக வரைகிறார். ஆனால் இங்கு ஓவியங்களை பார்த்த பிறகுதான் விருமன் ஓவியரை சாத்துவார்.
(இதில் ஓவியர் கதாபாத்திரம் விருமனின் வாழ்க்கையை அமைதியாக பார்த்து குறித்துக்கொண்டிருக்கும் ஒரு குறியீடு - காலம்/விதி? இயக்குனர்? பார்வையாளர்கள்?)

விருமாண்டி மற்றும் ரங்கன் இருவரின் இயல்பையும் இந்த சம்பவங்களில் இருந்து புரிந்து கொள்ளலாமா? வநிசி படத்தை மனத்தில் வைத்துதான் கமல் அந்த ஓவியரை அடிக்கும் காட்சியை வைத்தாரா? The resemblance is uncanny..

22/365


No comments: