Jan 25, 2014

மணல்வீடு

மணல்வீடு சிறுபத்திரிகையை வாசிக்க நேர்ந்தது. இரு மாதத்திற்கு ஒருமுறை வரும் இது கதை, கவிதை, கட்டுரை, உலக இலக்கியம் என்று ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ். அம்பையின் சிறுகதை வழக்கம் போல் எளிமை, அருமை. முரகாமியின் சிறுகதை என்று ஒரு குறுநாவல் இருக்கிறது. இனிதான் படிக்கவேண்டும்.

இதில் கவர்ந்தது கெட்டவார்த்தை பேசுவோம் என்கிற பெருமாள்முருகன் தொடர். ஏற்கனவே இதே பெயரில் புத்தகமும் வந்திருக்கிறது. இத்தொடர் அந்த புத்தகத்தில் உள்ளவையா அல்லது அதன் தொடர்ச்சியா தெரியவில்லை.

(18+)

வாயில் விழைதல் என்று ஆயிரக்கணக்கான வருடங்கள் முன்னாலேயே வழக்கத்தில் இருக்கும் வாய்வழி புணர்ச்சி பற்றி பேசுகிறது. 'ஆசாரமாக வாழ்வது எப்படி?' என்று இன்று வந்திருந்தால் பெயர் வைத்திருக்கக்கூடிய ஆசாரக்கோவை 'அதை' செய்துவிட்டு குளித்துவிட வேண்டும் என்று சொல்கிறதாம். மேலும் பல சுவாரசிய தகவல்கள்.. நம்மூரிலும் காலம்காலமாக (பிரிவு 377 படி) குற்றவாளிகளாக வாழ்ந்திருக்கிறோம் என்பது உவகையே அளிக்கிறது :)

24/365


No comments: