Mar 25, 2014

முன்னாள் காதலிகள்

அடிக்கடி கீழ்வரும் கான்செப்டில் ஸ்டேட்டஸ் அல்லது கதை கண்ணில் படுகிறது:

கதாநாயகன் ஊருக்கோ, எங்கேயோ போகும்போது வெகு நாட்கள் கழித்து தற்செயலாகவோ வேண்டுமென்றேவோ தான் ஒரு தலையாகவோ அல்லது பரஸ்பரமாகவோ காதலித்த நபரை பார்க்கிறார் (பெண்தான்).

உடனே தனது பழைய நினைவுகளில் மூழ்குகிறார். அந்த பெண் நபரின் செழுமையான வாழ்வை, அவளின் கனவுகளை, ஆசைகளை நினைத்துபார்க்கிறார். அதை கம்பேர் செய்து அவளின் தற்போதைய நிலையை நோக்குகிறார். அந்த பெண் நபரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தனது கண்றாவியான வாழ்க்கையை கதாநாயகனுக்கு தெரியப்படுத்தி விடுகிறார் ('ஏதோ இருக்கேன் சரவணா' என்ற படியே உருண்டோடிய கண்ணீரை தெரியாமல் சிரித்துக்கொண்டே துடைத்து, அழும் குழந்தையை வேண்டா வெறுப்பாக தூக்கினாள்).. பெரும்பாலும் அவளுக்கு வயதான, சந்தேகப்படும், கொடுமையான கேரக்டர் தான் கணவர்.

கடைசியில் கதாநாயகன் அவளின் நிலையை எண்ணி, துக்கம் தொண்டையை அடைக்க வெளியேறுவதாக அந்த சம்பவம் முடியும்.

எனக்கு என்ன தோணும்னா, கற்பனையில் கூட நாம் விரும்பிய பெண் சந்தோஷமாக இருப்பது நமக்கு பிடிக்காதோ?


1 comment:

ராஜி said...

அப்படித்தான் போல!